நீலகிரி: ஆங்கில கல்விக்கு இணையாக ஈடு கொடுக்க முடியாமல் நலிவடைந்து மூடப்படும் சூழலுக்கு சென்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் மீண்டு புது பொலிவுடன் தரம் உயர்ந்துள்ளது.
நீலகிரி: ஆங்கில கல்விக்கு இணையாக ஈடு கொடுக்க முடியாமல் நலிவடைந்து மூடப்படும் சூழலுக்கு சென்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் மீண்டு புது பொலிவுடன் தரம் உயர்ந்துள்ளது.
நவீன காலத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க விரும்புவது இல்லை. தரம் என்ற ஒற்றை வார்த்தை இதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தால் தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன.
இந்த நிலைக்கு, நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த மார்லி மந்து ஓடைக்காடு பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியும் தள்ளப்பட்டது. குறிப்பாக கடந்த காலங்களில் இப்பள்ளியில் சுமார் 300 முதல் 400 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், அனைத்து மாணவர்களும் இந்தப் பள்ளியை விட்டு தனியார் பள்ளிக்குச் சென்றனர். இதனால் இப்பள்ளி நலிவடைந்து மூடப்படும் சூழல் ஏற்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் ஆங்கில வழிக் கல்வி மட்டுமல்லாமல், பள்ளி கட்டிடத்தின் மோசமான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததும் தான் என்று குற்றம் சாட்டப்பட்டது.
புதுப்பொலிவு
பள்ளியின் நிலை அறிந்து நல்லாசிரியர் விருது பெற்ற சோபா என்ற ஆசிரியர் சமீபத்தில் இந்த அரசுப் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றார். பின்னர், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பள்ளியின் கட்டிடங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், பூங்கா மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார்.

மேலும், பள்ளி வளாகத்தில் நாவல், விக்கி போன்ற பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்து பள்ளியை புது பொலிவடையச் செய்தார்.

மேலும், இப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியையும், கணினி கல்வியையும் அறிமுகப்படுத்தி பள்ளியின் கல்வி தரத்தை உயர்த்தினார். இவரது முயற்சியால், 5-ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை தற்போது 40-ஆக அதிகரித்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்தை அரசுப் பள்ளியாலும் தார முடியும் என்பதற்கு இந்த பள்ளி ஒரு சான்றாக விளங்குகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வி மற்றும் அனைத்து அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுத்தால், அனைத்து அரசுப் பள்ளிகளும் புதுப்பொலிவு பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நவீன காலத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க விரும்புவது இல்லை. தரம் என்ற ஒற்றை வார்த்தை இதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தால் தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன.
இந்த நிலைக்கு, நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த மார்லி மந்து ஓடைக்காடு பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியும் தள்ளப்பட்டது. குறிப்பாக கடந்த காலங்களில் இப்பள்ளியில் சுமார் 300 முதல் 400 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், அனைத்து மாணவர்களும் இந்தப் பள்ளியை விட்டு தனியார் பள்ளிக்குச் சென்றனர். இதனால் இப்பள்ளி நலிவடைந்து மூடப்படும் சூழல் ஏற்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் ஆங்கில வழிக் கல்வி மட்டுமல்லாமல், பள்ளி கட்டிடத்தின் மோசமான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததும் தான் என்று குற்றம் சாட்டப்பட்டது.
புதுப்பொலிவு
பள்ளியின் நிலை அறிந்து நல்லாசிரியர் விருது பெற்ற சோபா என்ற ஆசிரியர் சமீபத்தில் இந்த அரசுப் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றார். பின்னர், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பள்ளியின் கட்டிடங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், பூங்கா மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார்.

மேலும், பள்ளி வளாகத்தில் நாவல், விக்கி போன்ற பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்து பள்ளியை புது பொலிவடையச் செய்தார்.

மேலும், இப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியையும், கணினி கல்வியையும் அறிமுகப்படுத்தி பள்ளியின் கல்வி தரத்தை உயர்த்தினார். இவரது முயற்சியால், 5-ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை தற்போது 40-ஆக அதிகரித்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்தை அரசுப் பள்ளியாலும் தார முடியும் என்பதற்கு இந்த பள்ளி ஒரு சான்றாக விளங்குகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வி மற்றும் அனைத்து அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுத்தால், அனைத்து அரசுப் பள்ளிகளும் புதுப்பொலிவு பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.