சென்னை: சென்னையில் நேற்று காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் டுவீட்டியுள்ளார்.
சென்னை: சென்னையில் நேற்று காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் டுவீட்டியுள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை-கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. காவிரி,ஸ்டெர்லைட் ஆலை என்று பல பிரச்சினைகள் தமிழகத்தில் தலைதூக்கியுள்ள நிலையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறக் கூடாது என்று பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று மாலை சேப்பாக்கம் மைதானம் முன்பு கூடிய நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது அவர்களை கைது செய்ய வந்த காவலர்களை அக்கட்சியினர் தாக்கினர். தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் ரஜினி கூறியிருப்பதாவது:-

வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்கள் போலீசார் தாக்கப்படும் போது உடனிருந்த நிலையில், அக்கட்சி தொண்டர்களை நேரடியாக சாடி பேசிய ரஜினிகாந்த்-க்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.