காவிரி விவகாரம்: திருப்பூர் மாவட்ட போட்டோ கிராப்பர்ஸ் உண்ணாவிரத போராட்டம்

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட போட்டோ கிராப்பர்ஸ் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட போட்டோ கிராப்பர்ஸ் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் குமரன் சிலை அருகே காவிரி மேலாண்மை வாரியத்தை அமுல் படுத்த. வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட போட்டோ கிராப்பர்ஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும் இந்த போராட்டத்தை விவசாயங்களின் கூட்டமைப்பை சேர்ந்த நல்லுசாமி தொடங்கி வைத்தார்.

இதில் போட்டோ கிராப்பர்ஸ் சங்க தலைவர் வசந்தம் செந்தில், செயலாளர் சூரியன் கார்த்திகேயன், பொருளாளர் ஸ்ரீராம் இளங்கோ மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



காங்கேயம், வெள்ளகோவில், தாராபுரம், உடுமலைப்பேட்டை, அவினாசி மற்றும் பல்லடம் என அனைத்து ஸ்டுடியோ தரப்பினரும் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...