கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது - நகராட்சி ஆணையர்

நீலகிரி: உள்ளூர் நீர்த்தேக்கங்களில் இருப்பு உள்ளதால் கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி ஆணையர் சி.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி: உள்ளூர் நீர்த்தேக்கங்களில் இருப்பு உள்ளதால் கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி ஆணையர் சி.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரம் புனல் மின் உற்பத்திக்கு பயன்படும் பார்சன்ஸ் வேலி அணை. மேலும், மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலை, தொட்டபெட்டா மேல்/கீழ், கோடப்பமந்து மேல்/கீழ், ஓல்டு ஊட்டி மற்றும் கிளன் ராக் ஆகிய நீர்த்தேக்கங்கள் உதகையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றன.

நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்கத்தின் மொத்தம் 56 அடி கொள்ளளவில் தற்போது இருப்பு 32.50 அடியாகக் குறைந்து விட்டது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்தாண்டை விட இந்தாண்டு உதகை நகருக்கு தண்ணீர் விநியோகிக்கும் உள்ளூர் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளதால், கோடைக் காலத்தை சமாளித்து விடலாம் என நகராட்சி நிர்வாகம் நம்புகிறது.

ஆனால், தற்போதுள்ள இருப்பு கோடை சீசனின் போது உதகைக்கு வரும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யுமா? என்ற கேள்வியும் மேலோங்கி உள்ளது. 

தாராளம்:

உதகை நகராட்சி ஆணையர்(பொ) சி.ரவி கூறுகையில், "உதகை நகராட்சிக்கு தண்ணீர் விநியோகிக்கும் நீர்த்தேக்கங்களில் பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்கத்தை தவிர்த்து மற்ற நீர்த்தேக்கங்களில் கடந்தாண்டை விட தண்ணீர் இருப்பு அதிகமாக உள்ளது. மார்லிமந்தில் 10 அடி, டைகர் ஹிலில் 37 அடி, கோரி சோலையில் 9 அடி , மேல் தொட்டபெட்டாவில் 19.50 அடி, மேல் கோடப்பந்தில் 6 அடி, கீழ் தொட்டபெட்டாவில் 14 அடி, கீழ் கோடப்பமந்தில் 5 அடி, ஓல்டு ஊட்டியில் 5 அடி மற்றும் கிளன்ராக் நீர்த்தேக்கத்தில் 2 அடி தண்ணீர் இருப்பு உள்ளது.



பார்சன்ஸ் வேலியில் மின் உற்பத்தி நடப்பதால் நீர்மட்டம் குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்கான தண்ணீர் இருப்பை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த வேண்டாம் என மின் வாரியத்துக்கு கடிதம் கொடுக்கப்படும். இந்த இருப்பைக் கொண்டு ஏப்ரல் மாதம் வரை சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். முறையாகக் கையாண்டால் பருவ மழைக் காலம் வரை தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். மேலும், கோடை மழை பெய்தால், நீர்த்தேக்கங்கள் நிரம்பி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது." என்றார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...