கோவை குளங்களில் குவிகிறது குப்பை: நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் மெத்தனம்

கோவை: கோவை மாநகரில் உள்ள எட்டு குளங்களும், கட்டிடக் கழிவுகளாலும் காலாவதியான மருத்துவக் கழிவுகளாலும் நிறைந்து வருகின்றன. குளத்தில் கழிவுகளை கொட்டும் நபர்களைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவை: கோவை மாநகரில் உள்ள எட்டு குளங்களும், கட்டிடக் கழிவுகளாலும் காலாவதியான மருத்துவக் கழிவுகளாலும் நிறைந்து வருகின்றன. குளத்தில் கழிவுகளை கொட்டும் நபர்களைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்குளத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி பிளாஸ்டிக் வயர்கள் மற்றும் ரசாயன கழிவுகளை குளக்கரையில் சிலர் எரித்தனர். அவர்களை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி காலாவதியான மருத்துவ கழிவுகளை கொட்டிச் சென்ற 'நியூ ஜெயா பார்மசி' என்ற மருந்தகத்தின் உரிமையாளரை கையும் களவுமாக பிடித்த தன்னார்வலர்கள், அது தொடர்பாக மாநகராட்சி தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தனர்.



மேலும், கடந்த வாரம் நொய்யல் ஆற்றில் காலாவதியான உணவுப் பொருட்களை கொட்டிய நபரை பிடித்து பொதுப் பணித்துறை வசம் ஒப்படைத்தனர். ஆனால், அவர்கள் மீது பொதுப் பணித்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன், கூறுகையில், "கையும் களவுமாக பிடித்து கொடுத்தும் குளத்தை மாசுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லையென்றால் என்ன செய்வது? ஒவ்வொரு புகாரையும் உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றால் மட்டும் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இல்லையென்றால் நடவடிக்கைகள் இல்லை. பொது சொத்தை சேதம் செய்யும் நபர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும். அல்லது, சிறை தண்டனை விதிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்தால் நீர் நிலைகள் நம் கண் முன்னே அழிந்து போகும் அப்பாயம் உள்ளது." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...