உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் அடுத்தடுத்து உயிரிழக்கும் புள்ளி மான்கள்

நீலகிரி : நீலகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி : நீலகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது. 

நீலகிரி, கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, புள்ளி மான்கள் மற்றும் காட்டுப் பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள், அடிக்கடி சாலைகளில் வந்து செல்வதும், அவ்வப்போது, வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழப்பதும் வாடிக்கையாகிக் கொண்டே செல்கின்றன. விலங்குகள் உயிரிழப்பை தடுப்பதற்காக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சாலைகளில் உணவுப் பொருட்களை வீச வேண்டாம், அதிவேகமாக வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் -  உதகை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் மானின் உடலை அப்புறப்படுத்தினர். கடந்த சனிக்கிழமை புள்ளி மான் ஒன்று வாகனத்தில் மோதி உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிப்பது வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...