நீலகிரி : நீலகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி : நீலகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி, கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, புள்ளி மான்கள் மற்றும் காட்டுப் பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள், அடிக்கடி சாலைகளில் வந்து செல்வதும், அவ்வப்போது, வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழப்பதும் வாடிக்கையாகிக் கொண்டே செல்கின்றன. விலங்குகள் உயிரிழப்பை தடுப்பதற்காக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சாலைகளில் உணவுப் பொருட்களை வீச வேண்டாம், அதிவேகமாக வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் மானின் உடலை அப்புறப்படுத்தினர். கடந்த சனிக்கிழமை புள்ளி மான் ஒன்று வாகனத்தில் மோதி உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிப்பது வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி, கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, புள்ளி மான்கள் மற்றும் காட்டுப் பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள், அடிக்கடி சாலைகளில் வந்து செல்வதும், அவ்வப்போது, வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழப்பதும் வாடிக்கையாகிக் கொண்டே செல்கின்றன. விலங்குகள் உயிரிழப்பை தடுப்பதற்காக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சாலைகளில் உணவுப் பொருட்களை வீச வேண்டாம், அதிவேகமாக வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் மானின் உடலை அப்புறப்படுத்தினர். கடந்த சனிக்கிழமை புள்ளி மான் ஒன்று வாகனத்தில் மோதி உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிப்பது வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.