கோவையில் 978 சமரச வழக்குகளுக்கு தீர்வு : நீதிபதி கிருஷ்டோபர்

கோவை : கோவை மாவட்டத்தில் 978 சமரச வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதி கிருஷ்டோபர் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்தில் 978 சமரச வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதி கிருஷ்டோபர் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட நீதிமன்ற வளாக அரங்கில் இன்று மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி கிருஷ்டோபர் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் அவர் பேசியதாவது :- உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள சமரச மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர்கள் மூலமாகவோ வழக்குகள் சமரச மையத்திற்கு அனுப்பப்படுகிறது. இச்சமரச மையத்தின் மூலம் நேரடியாகவே எதிர்தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பயிற்சி பெற்ற சமரசர்கள் மூலம் சுமூகமான முறையில் வழக்குகள் முடித்துக் கொள்ள வழிவகுக்கப்படுகிறது. 

மேலும், சமரச மையத்தின் மூலம் தனியறையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை இரகசியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சமரச வழக்கு தரப்பினர்கள் தாங்களே முன்வந்து உண்மை நிலவரத்தை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தீர்வுகள் மிக எளிய முறையிலும் வேகமாகவும் பண விரயமில்லாலும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தீர்வுகளை காண சமரசம் மையங்கள் உதவுகிறது.

கோலை மாவட்டத்தில் இதுவரை மாவட்ட சமரச தீர்வு மையத்தின் மூலம் 2006-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 5,294 வழக்குகள் பதிவாகி உள்ளது. அதில், 978 சமரச வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை நீதிபதி கிருஷ்டோபர் தெரிவித்தார். முன்னதாக, இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சமரசம் நாடுவீர் என்ற தலைப்பில் கையேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...