பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி : ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை : சென்னையில் நாளை நடைபெறும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சேப்பாக்கம் மைதானத்தில் நுழைய ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை : சென்னையில் நாளை நடைபெறும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சேப்பாக்கம் மைதானத்தில் நுழைய ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளன. மேலும், தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பை மீறி போட்டியை நடத்தினால் மைதானத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகக் கூறியுள்ளனர். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி ஐ.பி.எல்., போட்டிகளில் சென்னை அணியின் வீரர்கள் கருப்பு பேட்ச் அணிந்து விளையாட வேண்டும் எனவும் ஒருதரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், நாளை சேப்பாக்கத்தில் சென்னை அணிக்கான போட்டி நடைபெறுமா..? என சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே, திட்டமிட்டபடி, சென்னையில் நாளை ஐ.பி.எல்., போட்டி நடக்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது. இசைக்கருவிகள், கார் சாவிகள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள், பேனர்கள், கொடிகள், பதாகைகளை, மொபைல் ஃபோன்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கறுப்பு சட்டை அணிந்து வரும் ரசிகர்களுக்கு சென்னை ஐ.பி.எல்., போட்டியைக் காண அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் ஏராளமான ரகசிய கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

நாளை (ஏப்.,10) நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்துள்ளனர். மேலும், மைதானம் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு கருதி 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...