வண்டலூரில் இருந்த ‘கிரி’ ஆண் யானை முதுமலைக்கு ‘டிரான்ஸ்பர்’

நீலகிரி: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ‘கிரி’ என்ற ஆண் யானை முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நீலகிரி: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ‘கிரி’ என்ற ஆண் யானை முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 



நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இம்முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை வனத்துறை ரோந்து பணிகளுக்காகவும், வனங்களை வீட்டு வெளியேறும் காட்டு யானைகளை விரட்டுதல் மற்றும் பிடித்தல் போன்ற கும்கி பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும், தெப்பக்காடு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு யானை சவாரிக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் சாடிவயல் முகாமில் இருந்த பாரி மற்றும் விஜய் ஆகிய கும்கி யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதில் பாரி டாப்சிலிப்பில் உள்ள யானைகள் முகாமிற்கும், விஜய் தெப்பக்காடு முகாமிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டன. இதற்கு பதிலாக காட்டு யானை விரட்டும் பணிகளுக்காக தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த ஜான், சேரன் ஆகிய இரண்டு யானைகள் கடந்த 3-ம் தேதியன்று சாடிவயல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

தற்போது தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஒரு குட்டி யானை உட்பட 22 யானைகள் உள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், ஜவல்கிரி வனத்தில் தாயை பிரிந்த நிலையில் சுற்றி திரிந்த ஆண் யானை குட்டி கடந்த 2010-ம் ஆண்டு வனத்துறையினரால் மீட்கப்பட்டது. இந்த யானை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு கிரி என பெயரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. 

தற்போது இதற்கு 9 வயதாகிறது. கும்கியாக மாற்ற பயிற்சி அளிப்பதற்கான வசதிகள் வண்டலூரில் இல்லாததால், இந்த யானையை முதுமலைக்கு இட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை வண்டலூர் பூங்காவில் இருந்து லாரி மூலம் முதுமலைக்கு அழைத்து வரப்பட்டது. அதன் உடல் எடை சரிபார்க்கப்பட்டு, பின்னர் மாயாற்றில் குளிப்பாட்டப்பட்டது. பின்னர், தெப்பகாட்டில் உள்ள பாம்பேக்ஸ் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. கிரியின் வருகையைத் தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...