கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பு செய்த நிலத்திற்கான பணத்தை கடந்த 35 ஆண்டுகளாகக் கொடுக்காமல் தாமதிப்பதாக நிலம் கொடுத்தவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பு செய்த நிலத்திற்கான பணத்தை கடந்த 35 ஆண்டுகளாகக் கொடுக்காமல் தாமதிப்பதாக நிலம் கொடுத்தவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தவர்கள் கூறுகையில், "கடந்த 1980ம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 5 ஊர்களை உள்ளடக்கிய பொதுமக்கள் 1,300 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு அப்போதைய சந்தை விலை 8,000 என நிர்ணயிக்கப்பட்டது. குறைவாக இருப்பதின் காரணமாக நிலம் கொடுத்தவர்கள் இரண்டாண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்து நீதிமன்றம் 1.9.12-ல் நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 4 லட்சம் வழங்க உத்தரவிட்டது. இதில் பலருக்கு முதல் தவணை பணம் வழங்கப்படவில்லை.
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தற்போது வரை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் புறக்கணிக்கிறது. இதனால், தங்கள் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தவர்கள் கூறுகையில், "கடந்த 1980ம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 5 ஊர்களை உள்ளடக்கிய பொதுமக்கள் 1,300 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு அப்போதைய சந்தை விலை 8,000 என நிர்ணயிக்கப்பட்டது. குறைவாக இருப்பதின் காரணமாக நிலம் கொடுத்தவர்கள் இரண்டாண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்து நீதிமன்றம் 1.9.12-ல் நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 4 லட்சம் வழங்க உத்தரவிட்டது. இதில் பலருக்கு முதல் தவணை பணம் வழங்கப்படவில்லை.
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தற்போது வரை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் புறக்கணிக்கிறது. இதனால், தங்கள் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.