திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவூர் செல்லும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும், அன்னூர் செல்லும் அரசு பேருந்து ஊழியர்களுக்கும் இடையே யார் முதலில் செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. இதனால், இரு பேருந்து ஓட்டுநர்களும் தங்களது பேருந்துகளை புதுமார்க்கெட் வீதியில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறுகிய பாதை கொண்ட இப்பகுதியில் வேறு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்தனர். ஆனால், இதனைப் பொருட்படுத்தாமல், இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த இந்தப் போராட்டத்திற்கு பிறகு, அவர்கள் அங்கிருந்து பேருந்தை எடுத்துச் சென்றனர். இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பேருந்து ஊழியர்கள் மீது பொறுப்பை உணர்ந்து நடவடிக்கை எடுக்காமல், போலீசார் வேடிக்கை பார்த்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவூர் செல்லும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும், அன்னூர் செல்லும் அரசு பேருந்து ஊழியர்களுக்கும் இடையே யார் முதலில் செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. இதனால், இரு பேருந்து ஓட்டுநர்களும் தங்களது பேருந்துகளை புதுமார்க்கெட் வீதியில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறுகிய பாதை கொண்ட இப்பகுதியில் வேறு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்தனர். ஆனால், இதனைப் பொருட்படுத்தாமல், இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த இந்தப் போராட்டத்திற்கு பிறகு, அவர்கள் அங்கிருந்து பேருந்தை எடுத்துச் சென்றனர். இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பேருந்து ஊழியர்கள் மீது பொறுப்பை உணர்ந்து நடவடிக்கை எடுக்காமல், போலீசார் வேடிக்கை பார்த்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.