அரசு - தனியார் பேருந்து ஊழியர்களிடையே தகராறு : ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவூர் செல்லும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும், அன்னூர் செல்லும் அரசு பேருந்து ஊழியர்களுக்கும் இடையே யார் முதலில் செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. இதனால், இரு பேருந்து ஓட்டுநர்களும் தங்களது பேருந்துகளை புதுமார்க்கெட் வீதியில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறுகிய பாதை கொண்ட இப்பகுதியில் வேறு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்தனர். ஆனால், இதனைப் பொருட்படுத்தாமல், இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த இந்தப் போராட்டத்திற்கு பிறகு, அவர்கள் அங்கிருந்து பேருந்தை எடுத்துச் சென்றனர். இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பேருந்து ஊழியர்கள் மீது பொறுப்பை உணர்ந்து நடவடிக்கை எடுக்காமல், போலீசார் வேடிக்கை பார்த்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...