கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி, கூலிங்கிளாஸ்

கோவை: கோடை வெயிலை சமாளிக்க கோவை மாநகர போலீசாரின் சார்பில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்களுக்கு, சோலார் தொப்பி மற்றும் கூலிங்கிளாஸ் வழங்கப்பட்டு உள்ளது.

கோவை: கோடை வெயிலை சமாளிக்க கோவை மாநகர போலீசாரின் சார்பில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்களுக்கு, சோலார் தொப்பி மற்றும் கூலிங்கிளாஸ் வழங்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இது இன்னமும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், ஆண்டுதோறும் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு, சாதாரணமாக உள்ள தொப்பிக்கு பதிலாக, சோலார் தொப்பி வழங்கப்பட்டு வருகிறது. இதனால், வெயிலின் நீண்ட நேரம் நிற்கும் காவலர்களுக்கு அதிகமான பாதிப்புகள் இருக்காது.

இந்த நிலையில், இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா, ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலில் போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி மற்றும் கூலிங்கிளாஸ் வழங்கினார். கோவை மாநகரில் மொத்தம் 56 சிக்னல் பாய்ண்டுகள் உள்ளன. இதில், ஒரு சிக்னலில் இரண்டு காவலர்கள் வீதம் சாலை போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதில், இன்று போக்குவரத்து பணியில் இருக்கும் காவலர்களுக்கு மொத்தம் 60 தொப்பி மற்றும் 60 கூலிங்கிளாஸ் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. பின்னர், வரும் வெள்ளிக்கிழமை மீதமுள்ள காவலர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.



அதேபோல, வெயில் காலங்களில் போக்குவரத்து காவலர்களுக்கு தினமும் 10.30 மணி முதல் 5;30 மணி வரை நான்கு வேளையும் நீர்மோர் அல்லது எலுமிச்சை சாறும் வழங்கப்பட உள்ளது. இதனால், போக்குவரத்து காவலர்களும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த நீர் மோர் வழங்கும் விழாவை மாநகர காவல் துணை ஆணையாளர் சுஜித் குமார் (போக்குவரத்து) துவங்கி வைத்தார். இதில், போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் மகுடபதி, கொடி செல்வம் மற்றும் ஆய்வாளர் சதாசிவம், சண்முகம் உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...