கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள கக்கன் நகர் பகுதி டாஸ்மாக் பாரை அகற்றக் கோரி பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள கக்கன் நகர் பகுதி டாஸ்மாக் பாரை அகற்றக் கோரி பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- சிங்காநல்லூர் நகரப் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள கக்கன் நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. மதுபானக் கடையின் பின்னால் இயங்கி வரும் டாஸ்மாக் பாரின் பின்புறம் மது அருந்த வருபவர்கள் கடையின் பின்வாசல் வழியாக மது அருந்துகின்றனர். மேலும், அங்கேயே சிறுநீர் கழிப்பது, மதுபாட்டில்களை சாலையிலேயே வீசிச் செல்வது போன்ற சட்டவிரோத செயல்களும் குடிமகன்கள் ஈடுபடுகின்றனர். இதனால், அங்கு வசிப்பவர்களுக்கும், அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

மேலும். அவ்வழியாக செல்லும் பெண்களைப் போதை ஆசாமிகள் கேலி செய்கின்றனர். இது குறித்து கேட்டால் அவமரியாதையாக பேசுகின்றனர். இதுபோன்ற அநாகரிகமற்ற செயல்களால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, டாஸ்மாக் பாரை அகற்ற வேண்டும் அல்லது பின்புறமாக உள்ள கதவை சுவர் வைத்து அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.