மாவட்ட ஆட்சியரிடம் லாரிப்பேட்டை பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மனு

கோவை: இடபற்றாக்குறை உள்ள நிலையில் புதிய கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.


கோவை: இடபற்றாக்குறை உள்ள நிலையில் புதிய கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக லாரி புக்கிங் ஏஜெண்ட் அலுவலகம், பஞ்சர் கடை ஒர்க்‌ஷாப் என பல்வேறு தொழில்கள் செய்து வருகிறோம். 1976-ம் ஆண்டு தங்களுக்கு மாநகராட்சி இடம் ஒதுக்கிய போது 120 கடைகள் இருந்தன. தற்போது, 220 கடைகளுக்கு மேல் அதிகரித்து 1,500-க்கும் மேற்பட்டோர் தொழில் செய்து வருகின்றனர்.

லாரிப்பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைப் பழைய மார்கெட்டுக்கு கொடுத்ததின் காரணமாக இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், புதிய கடைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.



உக்கடம் பகுதியில் இயங்கி வரும் பழக் கமிஷன் மண்டி வியாபாரிகளுக்கு லாரிப் பேட்டையில் இடம் ஒதுக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து தினந்தோறும் பழங்கள் கோவைக்கு வருகின்றன. மேலும், செட்டிபாளையம் பகுதியில் 25 ஏக்கரில் இடம் ஒதுக்கியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. அதில், அனைத்து வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...