நீலகிரி: சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தேவையா என்பது குறித்து கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி: சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தேவையா என்பது குறித்து கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "தலித் மக்கள் மீதான சரத்துக்களை நீர்த்து போகும் விதமாக நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. பா.ஜ.க., ஆட்சிக்கு வந்த பிறகு இந்துத்துவா அமைப்புகள் மூலம் சிறுபான்மையினர் தலித் மக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த சட்டத்தை நீர்த்து போக செய்ததால், இவர்களின் தாக்குதல் அதிகரித்துக் காணப்படும் கூடலூரில் அனைத்து மக்களையும் இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தேயிலை விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ. 30 கிடைக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஜென்ம நிலங்கள் பட்டா வழங்காமல் உள்ளதைக் கண்டிக்கிறேன்.
காவிரி நீர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், தீர்ப்புகளை மத்திய அரசு மதிக்காமல் இருந்தால் மாநில அரசோ, மாவட்ட நிர்வாகமோ எதிர்காலத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கக்கூற முடியாத நிலை ஏற்படும். ஒரு வாரகால கண்டன போராட்டத்திற்குப்பின் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் கர்நாடக அரசை விமர்சிக்கக் கூடாது. ஐ.பி.எல்., போட்டிகள் தேவையா என்பது குறித்து அந்த அமைப்புதான் முடிவு செய்ய வேண்டும்.
தி.மு.க. காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் பலரும் இணைவார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கத்தை சபாநாயகர் நீக்கி இருக்கக்கூடாது. நீதிமன்ற உத்தரவு வந்ததும் இந்த ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளது. கூட்டுறவு தேர்தலை ரத்து செய்ய வேண்டும். சூரப்பா, வீரப்பா, கட்டப்பாக்களைப் போடுவதைவிட முறைப்படி தேர்ந்தெடுப்பதில் வேறுமாநிலத்தைசேர்நத்வரைநியமித்திருக்க வேண்டாம். இதனை காங்கிரஸ் கண்டிக்கிறது. பலவீனத்தை மறைப்பதற்கு மத்திய அரசு மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது," என்றார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "தலித் மக்கள் மீதான சரத்துக்களை நீர்த்து போகும் விதமாக நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. பா.ஜ.க., ஆட்சிக்கு வந்த பிறகு இந்துத்துவா அமைப்புகள் மூலம் சிறுபான்மையினர் தலித் மக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த சட்டத்தை நீர்த்து போக செய்ததால், இவர்களின் தாக்குதல் அதிகரித்துக் காணப்படும் கூடலூரில் அனைத்து மக்களையும் இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தேயிலை விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ. 30 கிடைக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஜென்ம நிலங்கள் பட்டா வழங்காமல் உள்ளதைக் கண்டிக்கிறேன்.
காவிரி நீர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், தீர்ப்புகளை மத்திய அரசு மதிக்காமல் இருந்தால் மாநில அரசோ, மாவட்ட நிர்வாகமோ எதிர்காலத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கக்கூற முடியாத நிலை ஏற்படும். ஒரு வாரகால கண்டன போராட்டத்திற்குப்பின் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் கர்நாடக அரசை விமர்சிக்கக் கூடாது. ஐ.பி.எல்., போட்டிகள் தேவையா என்பது குறித்து அந்த அமைப்புதான் முடிவு செய்ய வேண்டும்.
தி.மு.க. காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் பலரும் இணைவார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கத்தை சபாநாயகர் நீக்கி இருக்கக்கூடாது. நீதிமன்ற உத்தரவு வந்ததும் இந்த ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளது. கூட்டுறவு தேர்தலை ரத்து செய்ய வேண்டும். சூரப்பா, வீரப்பா, கட்டப்பாக்களைப் போடுவதைவிட முறைப்படி தேர்ந்தெடுப்பதில் வேறுமாநிலத்தைசேர்நத்வரைநியமித்திருக்க வேண்டாம். இதனை காங்கிரஸ் கண்டிக்கிறது. பலவீனத்தை மறைப்பதற்கு மத்திய அரசு மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது," என்றார்.