கோவை: சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கட்சி தொடர்பான ஆவணங்கள் இருந்துள்ளதால் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அக்கட்சியின் மாநில தலைவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கோவை: சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கட்சி தொடர்பான ஆவணங்கள் இருந்துள்ளதால் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அக்கட்சியின் மாநில தலைவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியன்று நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை துடியலூர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
வழக்கு தொடர்பாக முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் என்ற நான்கு பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலையில் அமைப்பு ரீதியான பின்னணி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.
வீடுகளில் சோதனை
இந்நிலையில், தேசிய புலனாய்வு துறை, சசிகுமார் கொலை வழக்கில் பல்வேறு விசாரணைகளை நடத்தினர். இதில் கைது செய்யப்பட்ட முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். இதில் அபுதாகிர், சுபேர் ஆகியோரின் இல்லங்களில் மூன்று செல் போன்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையானது சாய்பாபா காலனி, உக்கடம் ஆகிய பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
இந்த சோதனையின் போது பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு தொடர்பான ஆவணங்கள் அவர்களின் வீடுகளில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த அமைப்பினர் மாநில தலைவர் முகம்மது இஸ்மாயிலுக்கு என்.ஐ.ஏ சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, என்.ஐ.ஏ. சார்பில் சுபேர் மற்றும் சதாம் உசைன் ஆகியோர் மீது பூந்தமல்லி சிறப்பு நீதி மன்றத்தில் கடந்த 7-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியன்று நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை துடியலூர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
வழக்கு தொடர்பாக முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் என்ற நான்கு பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலையில் அமைப்பு ரீதியான பின்னணி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.
வீடுகளில் சோதனை
இந்நிலையில், தேசிய புலனாய்வு துறை, சசிகுமார் கொலை வழக்கில் பல்வேறு விசாரணைகளை நடத்தினர். இதில் கைது செய்யப்பட்ட முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். இதில் அபுதாகிர், சுபேர் ஆகியோரின் இல்லங்களில் மூன்று செல் போன்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையானது சாய்பாபா காலனி, உக்கடம் ஆகிய பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
இந்த சோதனையின் போது பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு தொடர்பான ஆவணங்கள் அவர்களின் வீடுகளில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த அமைப்பினர் மாநில தலைவர் முகம்மது இஸ்மாயிலுக்கு என்.ஐ.ஏ சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, என்.ஐ.ஏ. சார்பில் சுபேர் மற்றும் சதாம் உசைன் ஆகியோர் மீது பூந்தமல்லி சிறப்பு நீதி மன்றத்தில் கடந்த 7-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.