நீலகிரி: காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி: காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசைக் கண்டித்து நேற்று நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக - கர்நாடக எல்லையான கக்கநல்லாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட முயன்றனர். அங்கு குவிக்கப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான போலீசார் எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டவர்களை தெப்பக்காடு பகுதியில் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு கர்நாடக எல்லையான கக்கநல்லா பகுதிக்குச் செல்ல முயன்றவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில் மாற்று வழியில் சென்ற நாம் தமிழர் கட்சியினர் 10-க்கும் மேற்பட்டவர்கள் திட்டமிட்டபடி கக்கநல்லா பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த போராட்டம் காரணமாக இரு மாநிலங்கள் இடையே சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.