கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

நீலகிரி: காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.


நீலகிரி: காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசைக் கண்டித்து நேற்று நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக - கர்நாடக எல்லையான கக்கநல்லாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட முயன்றனர். அங்கு குவிக்கப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான போலீசார் எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டவர்களை தெப்பக்காடு பகுதியில் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு கர்நாடக எல்லையான கக்கநல்லா பகுதிக்குச் செல்ல முயன்றவர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில் மாற்று வழியில் சென்ற நாம் தமிழர் கட்சியினர் 10-க்கும் மேற்பட்டவர்கள் திட்டமிட்டபடி கக்கநல்லா பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.



இந்த போராட்டம் காரணமாக இரு மாநிலங்கள் இடையே சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...