காவிரி மேலாண்மை வாரியம்: கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்தும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோவை உக்கடம் பகுதி மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதனால் இன்று மீன் மார்கெட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. மீன் வியாபாரிகளின் இந்த போராட்டம் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து விற்பனைக்கு வந்த மீன்கள் வீணானதுடன், வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்

மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே நேற்று நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். மேலும், காவிரிக்காக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதனை சிதைக்கும் விதமாக நடத்தப்படும் ஜ.பி.எல் போட்டி தடைக்கு விதிக்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...