கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் துர்நாற்றம் அதிகமானதால், முறையாக பராமரிப்பு செய்யாத மாநகராட்சியைக் கண்டித்து நேற்று இரவு கோணவாய்க்கால் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் துர்நாற்றம் அதிகமானதால், முறையாக பராமரிப்பு செய்யாத மாநகராட்சியைக் கண்டித்து நேற்று இரவு கோணவாய்க்கால் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவையில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 650 டன் அளவிலான குப்பை மற்றும் கழிவு பொருட்கள் வெள்ளலூரில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. அங்கு அவை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பப்படுகிறது.
அதிகப்படியான குப்பைகள் மலைபோல் தேங்குவதால், குப்பை கிடங்கை ஒட்டியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது குப்பைகளில் தீ வைக்கப்படுவதால் புகையும், துர்நாற்றமும் பொதுமக்களை நாள்தோறும் வாட்டிவதைக்கிறது.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக குப்பை கிடங்கிலிருந்து மிக மோசமான துர்நாற்றம் வீசிவருவதால், அப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சொந்த வீடு இருந்தும் பக்கத்து தெருக்களில் உள்ள வீடுகளில் குழந்தைகளும் முதியோர்களும் தஞ்சமடைந்து வருகின்றனர்.

பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொண்டு துர்நாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டி பலமுறை புகாரளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று இரவு 10 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கோவையில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 650 டன் அளவிலான குப்பை மற்றும் கழிவு பொருட்கள் வெள்ளலூரில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. அங்கு அவை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பப்படுகிறது.
அதிகப்படியான குப்பைகள் மலைபோல் தேங்குவதால், குப்பை கிடங்கை ஒட்டியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது குப்பைகளில் தீ வைக்கப்படுவதால் புகையும், துர்நாற்றமும் பொதுமக்களை நாள்தோறும் வாட்டிவதைக்கிறது.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக குப்பை கிடங்கிலிருந்து மிக மோசமான துர்நாற்றம் வீசிவருவதால், அப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சொந்த வீடு இருந்தும் பக்கத்து தெருக்களில் உள்ள வீடுகளில் குழந்தைகளும் முதியோர்களும் தஞ்சமடைந்து வருகின்றனர்.

பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொண்டு துர்நாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டி பலமுறை புகாரளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று இரவு 10 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.