'வீடுகளில் கருப்பு கொடியை கட்டுவோம்' : பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைக்கும் எதிர்க்கட்சிகள்

சென்னை : தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கோடி ஏற்ற அனைத்து கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

சென்னை : தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கோடி ஏற்ற அனைத்து கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

சென்னை அருகே அமைந்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள திருவிடந்தை-யில் ராணுவ கண்காட்சி துவங்க உள்ளது. வரும் 11-ம் தேதி தொடங்கும் இந்தக் கண்காட்சி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரதமருக்கு கருப்பு கோடி காட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.  பிரதமர் தமிழகம் வரும் பொழுது, மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

அவ்வாறு இல்லையேல், கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. கட்சி வேறுபாடு பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பேனர்கள் சேதம் 

இந்த நிலையில், பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களை மர்ம நபர்கள் சிலர் கிழித்தனர். மேலும், அந்த பேனர்களில் "காவிரி எங்கே?" என்று கருப்பு மையால் எழுதிச் சென்றனர்.  சேதப்படுத்தப்பட்ட பேனர்களை அகற்றிய அதிகாரிகள் புதிய பேனர்களை தற்போது புதிய பேனர்களை வைத்துள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...