சென்னை : தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கோடி ஏற்ற அனைத்து கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னை : தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கோடி ஏற்ற அனைத்து கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னை அருகே அமைந்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள திருவிடந்தை-யில் ராணுவ கண்காட்சி துவங்க உள்ளது. வரும் 11-ம் தேதி தொடங்கும் இந்தக் கண்காட்சி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரதமருக்கு கருப்பு கோடி காட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் தமிழகம் வரும் பொழுது, மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவ்வாறு இல்லையேல், கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. கட்சி வேறுபாடு பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பேனர்கள் சேதம்
இந்த நிலையில், பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களை மர்ம நபர்கள் சிலர் கிழித்தனர். மேலும், அந்த பேனர்களில் "காவிரி எங்கே?" என்று கருப்பு மையால் எழுதிச் சென்றனர். சேதப்படுத்தப்பட்ட பேனர்களை அகற்றிய அதிகாரிகள் புதிய பேனர்களை தற்போது புதிய பேனர்களை வைத்துள்ளனர்.
சென்னை அருகே அமைந்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள திருவிடந்தை-யில் ராணுவ கண்காட்சி துவங்க உள்ளது. வரும் 11-ம் தேதி தொடங்கும் இந்தக் கண்காட்சி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரதமருக்கு கருப்பு கோடி காட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் தமிழகம் வரும் பொழுது, மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவ்வாறு இல்லையேல், கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. கட்சி வேறுபாடு பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பேனர்கள் சேதம்
இந்த நிலையில், பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களை மர்ம நபர்கள் சிலர் கிழித்தனர். மேலும், அந்த பேனர்களில் "காவிரி எங்கே?" என்று கருப்பு மையால் எழுதிச் சென்றனர். சேதப்படுத்தப்பட்ட பேனர்களை அகற்றிய அதிகாரிகள் புதிய பேனர்களை தற்போது புதிய பேனர்களை வைத்துள்ளனர்.