கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் விபத்துக்கள் : போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணமா?

நீலகிரி : மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் கோடை சீசனின் பொது இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக உதகையில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் செல்ல சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கல்லட்டி மலைப்பாதை வழியை பயன்படுத்துகின்றனர்.

நீலகிரி : மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் கோடை சீசனின் பொது இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக உதகையில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் செல்ல சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கல்லட்டி மலைப்பாதை வழியை பயன்படுத்துகின்றனர். 



36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை , வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலான சாலையாகவே இருந்து வருகிறது. இந்த மலைப்பாதையில் முதல் மற்றும் இரண்டாவது கியரில் தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் ஆங்காகே வைக்கப்பட்டிருந்தாலும், அதை கண்டு கொள்ளாத வாகன ஓட்டிகள் அதிக வேகத்திலேயே வாகனங்களை இயக்குகின்றனர்.

இதனால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிர்கள் பலியாகவதும், படுகாயங்கள் அடைவதும் வாடிக்கையாக உள்ளது. வாகன விபத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் பல நடவடிக்கைகள் எடுத்தாலும், வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே வாகன விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...