நீலகிரி : மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் கோடை சீசனின் பொது இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக உதகையில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் செல்ல சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கல்லட்டி மலைப்பாதை வழியை பயன்படுத்துகின்றனர்.
நீலகிரி : மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் கோடை சீசனின் பொது இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக உதகையில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் செல்ல சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கல்லட்டி மலைப்பாதை வழியை பயன்படுத்துகின்றனர்.

36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை , வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலான சாலையாகவே இருந்து வருகிறது. இந்த மலைப்பாதையில் முதல் மற்றும் இரண்டாவது கியரில் தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் ஆங்காகே வைக்கப்பட்டிருந்தாலும், அதை கண்டு கொள்ளாத வாகன ஓட்டிகள் அதிக வேகத்திலேயே வாகனங்களை இயக்குகின்றனர்.
இதனால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிர்கள் பலியாகவதும், படுகாயங்கள் அடைவதும் வாடிக்கையாக உள்ளது. வாகன விபத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் பல நடவடிக்கைகள் எடுத்தாலும், வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே வாகன விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை , வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலான சாலையாகவே இருந்து வருகிறது. இந்த மலைப்பாதையில் முதல் மற்றும் இரண்டாவது கியரில் தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் ஆங்காகே வைக்கப்பட்டிருந்தாலும், அதை கண்டு கொள்ளாத வாகன ஓட்டிகள் அதிக வேகத்திலேயே வாகனங்களை இயக்குகின்றனர்.
இதனால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிர்கள் பலியாகவதும், படுகாயங்கள் அடைவதும் வாடிக்கையாக உள்ளது. வாகன விபத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் பல நடவடிக்கைகள் எடுத்தாலும், வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே வாகன விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.