சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் திரையுலகினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் திரையுலகினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து பல்வேறு அமைப்பினரும் தமிழகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திரையுலகினர் போராட்டத்தில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் சங்க தலைவர் நாசர் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த போராட்டத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், சிவகுமார், சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர், விஷால், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து பல்வேறு அமைப்பினரும் தமிழகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திரையுலகினர் போராட்டத்தில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் சங்க தலைவர் நாசர் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த போராட்டத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், சிவகுமார், சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர், விஷால், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.