கோவை : காவிரி பிரச்சனைக்கு முழு காரணமான திமுக தமிழக மக்களிடம் தங்களது துரோகத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
கோவை : காவிரி பிரச்சனைக்கு முழு காரணமான திமுக தமிழக மக்களிடம் தங்களது துரோகத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை பகுதியில் நேற்று மாலை, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "கடந்த 1970-ம் ஆண்டு ஹேமாவதி அணை கட்ட ஆதரவு தெரிவித்தது 1974-ம் ஆண்டு காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியது, மேலும் இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது என காவிரி பிரச்சனைக்கு முழு காரணமான தி.மு.க தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை பகுதியில் நேற்று மாலை, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "கடந்த 1970-ம் ஆண்டு ஹேமாவதி அணை கட்ட ஆதரவு தெரிவித்தது 1974-ம் ஆண்டு காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியது, மேலும் இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது என காவிரி பிரச்சனைக்கு முழு காரணமான தி.மு.க தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.