காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஈரோட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஈரோட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மத்தியஅரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச்செயலாளர் விஜயகுமார், கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆனந்த ஜோதி, ஜெயச்சந்திரன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச்சேர்ந்த தினேஷ்குமார், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். 

இதே போல், திருப்பூரில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு உறுதுணையாக செயல்படும் மோடியை கண்டிக்கும் விதமாக கொங்கு இளைஞர் பேரவையினர் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...