ஈரோடு : சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா மறு பூஜையுடன் இன்று நிறைவடைகிறது.
ஈரோடு : சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா மறு பூஜையுடன் இன்று நிறைவடைகிறது.
சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது பண்ணாரி அம்மன் கோயில். இந்த கோயிலில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 19-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மன் சப்பரம் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா சென்றபின் மார்ச் 27-ம் தேதி கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கடந்த 3-ம் தேதி அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். நேற்று முன் தினம் மாலை தங்கத்தேர் வழிபாடு மற்றும் சுமங்கலி பெண்கள் பங்கற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

குண்டம் விழாவின் நிறைவாக இன்று மறு பூஜை நடைபெறுகிறது. இதற்கென இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மறு பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது.
சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது பண்ணாரி அம்மன் கோயில். இந்த கோயிலில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 19-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மன் சப்பரம் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா சென்றபின் மார்ச் 27-ம் தேதி கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கடந்த 3-ம் தேதி அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். நேற்று முன் தினம் மாலை தங்கத்தேர் வழிபாடு மற்றும் சுமங்கலி பெண்கள் பங்கற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

குண்டம் விழாவின் நிறைவாக இன்று மறு பூஜை நடைபெறுகிறது. இதற்கென இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மறு பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது.