மறு பூஜையுடன் நிறைவடைகிறது பண்ணாரி அம்மன் குண்டம் விழா

ஈரோடு : சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா மறு பூஜையுடன் இன்று நிறைவடைகிறது.

ஈரோடு : சத்தியமங்கலம்  பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா மறு பூஜையுடன் இன்று நிறைவடைகிறது. 

சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது பண்ணாரி அம்மன் கோயில். இந்த கோயிலில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 19-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து,  அம்மன் சப்பரம் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா சென்றபின் மார்ச் 27-ம் தேதி கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கடந்த 3-ம் தேதி அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். நேற்று முன் தினம் மாலை தங்கத்தேர் வழிபாடு மற்றும் சுமங்கலி பெண்கள் பங்கற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். 



குண்டம் விழாவின் நிறைவாக இன்று  மறு பூஜை நடைபெறுகிறது. இதற்கென இன்று  அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  மறு பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...