பாரத் கலா ஆராதனாவின் 'கேரளாவின் பாரம்பரிய நடனக் கலைகளை விளக்கும் நிகழ்ச்சி'

கோவை: பாரத் கலா ஆராதனா அமைப்பின் சார்பில் 'கேரளக் கலைகள்' (Essence of Kerala) எனும் தலைப்பில் கலை நிகழ்ச்சி, கிக்கானி பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் அரங்கில் இன்று மாலை நடைபெற்றது.

கோவை: பாரத் கலா ஆராதனா அமைப்பின் சார்பில் 'கேரளக் கலைகள்' (Essence of Kerala) எனும் தலைப்பில் கலை நிகழ்ச்சி, கிக்கானி பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் அரங்கில் இன்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கேரள மாநிலத்தின் பாரம்பரிய, நாட்டுப்புற கலைகளான மோகினி ஆட்டம், மயூர நிருத்தம், கைகொட்டிக் களி, செண்டை மேளம் போன்ற பல்வேறு நடனங்கள் அரேங்கேற்றப்பட்டன. அத்தோடு, நடணக் கலைகள் பற்றிய வரலாறும், நடனத்தின் நுணுக்கமான அசைவுகள் பற்றிய தகவல்களும் விளக்கப்பட்டன. 



இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சி.ஜி.எஸ். மணியன் பேசுகையில், "பறந்து விரிந்த பாரததேசம் கலைகளின் கூடம். ஒவ்வொரு மாநிலமும் தனக்கான பாரம்பரிய, கிராமிய கலைகளை தனக்கே உரிய தனித்துவத்தோடு கொண்டுள்ளது. சில கலை வடிவங்கள் அழியும் தருவாயிலும் உள்ளன. அழியும் தருவாயில் உள்ள கலை வடிவங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதும், இருக்கும் கலைகளை ஆராதிப்பதும் தான் இந்நிகழ்வின் அடிப்படைநோக்கம்.



இந்த முயற்சிக்கு வடிவம்கொடுக்கும் வகையிலும், அந்தந்த மாநிலத்தின் கலை வடிவங்கள், அதன் தனித்துவம், பாரம்பரியம் பற்றி கோவை மக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் "பாரத் கலா ஆராதனா" மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிகழ்வுகள் நடத்தி வருகிறது. ஒவ்வொரு நிகழ்வும், ஒரு மாநிலம் சார்ந்த கலைகளைப் போற்றி பூசிக்கும் விதமாக அமையும்" என்றார்.



கடந்த ஜனவரி மாதம், தமிழகத்தின் கலைகள் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், அடுத்த நிகழ்வாக கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நடனக் கலை நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாக 'பாரத் கலா ஆராதனா' அமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...