'பிராண்ட் கோவை தூதர்கள் விருதுகள்' வழங்கி கவுரவிப்பு

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் சிறந்த நிறுவனங்களைத் தேர்வு செய்து 'பிராண்ட் கோவை தூதர்கள் விருதுகள்' வழங்கி கவுரவிக்கப்பட்டன.

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் சிறந்த நிறுவனங்களைத் தேர்வு செய்து 'பிராண்ட் கோவை தூதர்கள் விருதுகள்' வழங்கி கவுரவிக்கப்பட்டன.



கோவை வர்த்தக மற்றும் தொழில்துறை இந்தியா கூட்டமைப்பின் மற்றும் அட்வர்டைசிங் கிளப் சார்பில் கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிறந்த நிறுவனங்களைத் தேர்வு செய்து 4-வது 'பிராண்ட் கோவை தூதர்கள் விருதுகள்' வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், முருகப்பா தொழில்நிறுவன குழுமத்தின் தலைவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், கோவை வர்த்தக மற்றும் தொழில்துறை இந்தியா கூட்டமைப்பின் தலைவர் வனிதா மோகன், அட்வர்டைசிங் கிளப் ஆப் கோவையின் தலைவர் மெர்வின் ஜெஸ்ஸி ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், ஸ்ரீ கோவையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ், அனன்யா நானா - நானி, ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஆகியோர் இதில் பங்கு பெற்றனர். இதைத்தொடர்ந்து, 'பிராண்ட் கோவை தூதர்கள் விருதுகள்' வழங்கப்பட்டன. 'எமர்ஜிங் பிரேண்ட் விருது' (Emerging brand) அனன்யா நானா - நானி தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அதன் இயக்குநர் உமா யுவராஜ் பெற்றுக் கொண்டார். இந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலம், சுமார் 1,500 முதியவர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.



மரபுரிமைக்கான விருதை (Legacy brand) ரூட்ஸ் நிறுவனமும், பார்முலா ஒன் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கிய நரேன் கார்த்திகேயனுக்கு தனிமனிதனுக்கான விருதும் (Brand Persona), ஐக்கானிக் விருது (Iconic Award) ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சுக்கும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...