கோவை: கோவை குமரன் குட்டையின் எல்லைப் பகுதிகளில் 2,000 மரக்கன்றுகளை சிறுதுளி அமைப்பினர் நடவு செய்தனர்.
கோவை: கோவை குமரன் குட்டையின் எல்லைப் பகுதிகளில் 2,000 மரக்கன்றுகளை சிறுதுளி அமைப்பினர் நடவு செய்தனர்.
மாதம்பட்டி பஞ்சாயத்தில் அமைந்துள்ள குமரன் குட்டையை ரூட்ஸ் நிறுவனங்களின் நிதி உதவியுடன் சீரமைக்கும் பணியைத் தொண்டு நிறுவனமான சிறுதுளி அமைப்பை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கரடிமடையில் உள்ள குளத்தை பசுமையாக மாற்றும் முயற்சியில் அந்த அமைப்பினர் ஈடுபட்டனர். இதற்காக சுமார் 2,000 மரக்கன்றுகளை குளத்தைச் சுற்றியுள்ள எல்லைகளில் நடவு செய்யப்பட்டது. மேலும், இந்தக் குளத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள தேவையற்ற களைச் செடிகளையும் அவர்கள் அகற்றினர்.
இது போன்ற குளங்களை சீரமைப்பதன் மூலம், இந்த நீர் ஆதாரங்கள் விவசாயத்திற்கும், வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்கும் பயன்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இத்திட்டம், வேளாண் காடுகளில் கூட நீர்ப்பாசன வசதியை செயல்படுத்த மகத்தான வாய்ப்பு என சிறுதுளி அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மாதம்பட்டி பஞ்சாயத்தில் அமைந்துள்ள குமரன் குட்டையை ரூட்ஸ் நிறுவனங்களின் நிதி உதவியுடன் சீரமைக்கும் பணியைத் தொண்டு நிறுவனமான சிறுதுளி அமைப்பை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கரடிமடையில் உள்ள குளத்தை பசுமையாக மாற்றும் முயற்சியில் அந்த அமைப்பினர் ஈடுபட்டனர். இதற்காக சுமார் 2,000 மரக்கன்றுகளை குளத்தைச் சுற்றியுள்ள எல்லைகளில் நடவு செய்யப்பட்டது. மேலும், இந்தக் குளத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள தேவையற்ற களைச் செடிகளையும் அவர்கள் அகற்றினர்.
இது போன்ற குளங்களை சீரமைப்பதன் மூலம், இந்த நீர் ஆதாரங்கள் விவசாயத்திற்கும், வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்கும் பயன்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இத்திட்டம், வேளாண் காடுகளில் கூட நீர்ப்பாசன வசதியை செயல்படுத்த மகத்தான வாய்ப்பு என சிறுதுளி அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.