பிரதமருக்கு 2,000 கடிதங்கள் அனுப்பிய பள்ளி மாணவர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு 2,000 கடிதங்களை பள்ளி மாணவர்கள் அனுப்பியுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு 2,000 கடிதங்களை பள்ளி மாணவர்கள் அனுப்பியுள்ளனர்.

நதி விவகாரத்தில் நீதி வேண்டி ஒட்டுமொத்த தமிழகமும் போராட்ட களத்தில் குதித்துள்ளது. பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியான நீலன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடந்த ஓரிரு நாள்களாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எழுத்து வடிவில் அமர்ந்து தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தினர். நேற்று பள்ளியில் பயிலும் 2000 பேரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில், "பிரதமர் அவர்களே, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்தின் விவசாயத்தையும், டெல்டா விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளனர்.



மாணவர்கள் அனைவரும் பள்ளியில் அமர்ந்து கடிதம் எழுதி அதில் தங்கள் முகவரியையும் குறிப்பிட்டு எழுதினர். தொடர்ந்து எழுதப்பட்ட கடிதங்களைச் சேகரித்து அனைத்து மாணவர்களின் சார்பில் 20 மாணவர்கள் மட்டும் நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தபால் நிலையத்தில் உள்ள பெட்டியில் போட்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...