காவிரி மேலாண்மை வாரியம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு 2,000 கடிதங்களை பள்ளி மாணவர்கள் அனுப்பியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு 2,000 கடிதங்களை பள்ளி மாணவர்கள் அனுப்பியுள்ளனர்.
நதி விவகாரத்தில் நீதி வேண்டி ஒட்டுமொத்த தமிழகமும் போராட்ட களத்தில் குதித்துள்ளது. பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியான நீலன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடந்த ஓரிரு நாள்களாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எழுத்து வடிவில் அமர்ந்து தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தினர். நேற்று பள்ளியில் பயிலும் 2000 பேரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில், "பிரதமர் அவர்களே, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்தின் விவசாயத்தையும், டெல்டா விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் பள்ளியில் அமர்ந்து கடிதம் எழுதி அதில் தங்கள் முகவரியையும் குறிப்பிட்டு எழுதினர். தொடர்ந்து எழுதப்பட்ட கடிதங்களைச் சேகரித்து அனைத்து மாணவர்களின் சார்பில் 20 மாணவர்கள் மட்டும் நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தபால் நிலையத்தில் உள்ள பெட்டியில் போட்டுள்ளனர்.
நதி விவகாரத்தில் நீதி வேண்டி ஒட்டுமொத்த தமிழகமும் போராட்ட களத்தில் குதித்துள்ளது. பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியான நீலன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடந்த ஓரிரு நாள்களாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எழுத்து வடிவில் அமர்ந்து தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தினர். நேற்று பள்ளியில் பயிலும் 2000 பேரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில், "பிரதமர் அவர்களே, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்தின் விவசாயத்தையும், டெல்டா விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் பள்ளியில் அமர்ந்து கடிதம் எழுதி அதில் தங்கள் முகவரியையும் குறிப்பிட்டு எழுதினர். தொடர்ந்து எழுதப்பட்ட கடிதங்களைச் சேகரித்து அனைத்து மாணவர்களின் சார்பில் 20 மாணவர்கள் மட்டும் நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தபால் நிலையத்தில் உள்ள பெட்டியில் போட்டுள்ளனர்.