ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சோதனைச் சாவடியில் நடத்திய சோதனையின் போது கோவையைச் சேர்ந்தவரிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சோதனைச் சாவடியில் நடத்திய சோதனையின் போது கோவையைச் சேர்ந்தவரிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவில் வளாகத்தில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களும், மது அருந்திச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை திருப்பதி மலைப் பாதையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவையைச் சேர்ந்தவரிடம் துப்பாக்கி இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 9 எம்.எம். ரக துப்பாக்கி மற்றும் 40 குண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், துப்பாக்கி வைத்திருந்தவரின் பெயர் தீபக் மிஸ்ரா, அவர் கோவைபுதூரைச் சேர்ந்தவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. கோவையில் அவர் ரியல் எஸ்டேட் நடத்தி வருவதும், உரிமம் பெற்றே துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, திருப்பதி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தானேவைச் சேர்ந்த ஒருவர் குண்டுகளுடன் கூடிய துப்பாக்கி வைத்திருந்த நபரைப் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவில் வளாகத்தில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களும், மது அருந்திச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை திருப்பதி மலைப் பாதையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவையைச் சேர்ந்தவரிடம் துப்பாக்கி இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 9 எம்.எம். ரக துப்பாக்கி மற்றும் 40 குண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், துப்பாக்கி வைத்திருந்தவரின் பெயர் தீபக் மிஸ்ரா, அவர் கோவைபுதூரைச் சேர்ந்தவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. கோவையில் அவர் ரியல் எஸ்டேட் நடத்தி வருவதும், உரிமம் பெற்றே துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, திருப்பதி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தானேவைச் சேர்ந்த ஒருவர் குண்டுகளுடன் கூடிய துப்பாக்கி வைத்திருந்த நபரைப் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.