கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பீளமேட்டை அடுத்த சித்ராவில் உள்ள கோவை சர்வேதச விமான நிலையத்தை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதையடுத்து, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிக்கப்படும் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு சதுரஅடிக்கு ரூ. 1,500-யும், விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 900-யும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஒருசிலர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரனிடம் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். அந்த மனுவில், கூறியிருப்பதாவது, இந்தப் பகுதிகளில் 18 முதல் 25 ஆண்டுகள் விளைச்சல் கொடுத்த தென்னை மரங்களே உள்ளன. ஆண்டுக்கு 200 தென்னை மரங்கள் விளைகின்றன. மேலும், மாசு மற்றும் பூச்சிக் கொல்லிகளில் இல்லாத மண் மற்றும் நிலத்தடி நீர் உள்ளது. குறிப்பாக, இந்தத் தென்னை மரங்கள் அகற்றப்படுவதால், நீரா பானம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விமான நிலைய விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் தென்னை மரங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இருகூர், காளப்பட்டி உள்ளிட்ட விமான நிலைய விரிவாக்கத்திற்குட்படுத்தப்படும் பகுதிகளில் சுமார் 3,000 தென்னை மரங்கள் இருக்கின்றன. எனவே, இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வரும் செவ்வாய்கிழமை விவசாயிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
பீளமேட்டை அடுத்த சித்ராவில் உள்ள கோவை சர்வேதச விமான நிலையத்தை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதையடுத்து, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிக்கப்படும் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு சதுரஅடிக்கு ரூ. 1,500-யும், விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 900-யும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஒருசிலர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரனிடம் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். அந்த மனுவில், கூறியிருப்பதாவது, இந்தப் பகுதிகளில் 18 முதல் 25 ஆண்டுகள் விளைச்சல் கொடுத்த தென்னை மரங்களே உள்ளன. ஆண்டுக்கு 200 தென்னை மரங்கள் விளைகின்றன. மேலும், மாசு மற்றும் பூச்சிக் கொல்லிகளில் இல்லாத மண் மற்றும் நிலத்தடி நீர் உள்ளது. குறிப்பாக, இந்தத் தென்னை மரங்கள் அகற்றப்படுவதால், நீரா பானம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விமான நிலைய விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் தென்னை மரங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இருகூர், காளப்பட்டி உள்ளிட்ட விமான நிலைய விரிவாக்கத்திற்குட்படுத்தப்படும் பகுதிகளில் சுமார் 3,000 தென்னை மரங்கள் இருக்கின்றன. எனவே, இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வரும் செவ்வாய்கிழமை விவசாயிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.