சொட்டுநீர் பாசனம் மூலம் தயாராகிறது தர்பூசணி

ஈரோடு: சத்தியமங்கலம் வட்டாரப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சிக்கரசம்பாளையம், புதுகுய்யனூர், வடவள்ளி, ராஜன்நகர், இக்கரை நெகமம்புதூர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விவசாயிகள் தர்பூசணியை பயிரிட்டுள்ளனர்.

ஈரோடு: சத்தியமங்கலம் வட்டாரப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சிக்கரசம்பாளையம், புதுகுய்யனூர், வடவள்ளி, ராஜன்நகர், இக்கரை நெகமம்புதூர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விவசாயிகள் தர்பூசணியை பயிரிட்டுள்ளனர்.

நடப்பாண்டு பருவமழை பொய்த்து கிணறுகளில் நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதனால் விவசாயிகள் கிணற்றில் கிடைக்கும் சொற்ப நீரைக் கொண்டு சிக்கனமாக விவசாயம் செய்து வருகின்றனர். தோட்டங்களில் பாலித்தீன் பேப்பர் மூலம் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து நீர் பயன்பாட்டைச் சிக்கனமாக்கி நிறைவான மகசூல் பெறுகின்றனர். 

தர்பூசணி பயிரிடுவதால் ஏக்கர் ஒன்றுக்கு 30 டன் வரை மகசூல் கிடைக்கும். சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. 60 நாள்களில் அறுவடையாகும் புதிய ரக தர்பூசணிக்கு உரம், மருந்துகள் சொட்டுநீர் மூலம் பாய்ச்சுவதால் உரம் வீணாவதில்லை. மேலும் தற்போது உடலுக்கு தீங்கு விளைவிக்காத பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத பயோ உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்வதால் நுகர்வோர் தர்பூசணியை விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். 

அதிக நீர்ச்சத்துள்ள தர்ப்பூசணியை அனைத்து பருவங்களிலும் மக்கள் பயன்படுத்துவதால் இதன் தேவை அதிகமாகி வருகிறது. வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து உடனடியாக பணம் பட்டுவாடா செய்வதால் விவசாயிகள் தர்பூசணியை ஆர்வத்துடன் சாகுபடி செய்துவருகின்றனர். 

இதுகுறித்து திருமூர்த்தி என்ற விவசாயி கூறுகையில், கிலோ ரூ.5 க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், லாபம் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு ரூ.9 முதல் ரூ.11 வரை விற்பனையானதால் ஓரளவு நல்ல இலாபம் கிடைத்தது. சத்தி சுற்றுவட்டார பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக விலை குறைவாக விற்பனையாகிறது. அறுவடை செய்யப்படும் தர்பூசணியை வாங்கும் வியாபாரிகள் அவற்றை கேரளா, கர்நாடக மற்றும் மாலத்தீவு போன்ற இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...