சொட்டுநீர் பாசனம் மூலம் தயாராகிறது தர்பூசணி

ஈரோடு: சத்தியமங்கலம் வட்டாரப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சிக்கரசம்பாளையம், புதுகுய்யனூர், வடவள்ளி, ராஜன்நகர், இக்கரை நெகமம்புதூர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விவசாயிகள் தர்பூசணியை பயிரிட்டுள்ளனர்.

ஈரோடு: சத்தியமங்கலம் வட்டாரப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சிக்கரசம்பாளையம், புதுகுய்யனூர், வடவள்ளி, ராஜன்நகர், இக்கரை நெகமம்புதூர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விவசாயிகள் தர்பூசணியை பயிரிட்டுள்ளனர்.

நடப்பாண்டு பருவமழை பொய்த்து கிணறுகளில் நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதனால் விவசாயிகள் கிணற்றில் கிடைக்கும் சொற்ப நீரைக் கொண்டு சிக்கனமாக விவசாயம் செய்து வருகின்றனர். தோட்டங்களில் பாலித்தீன் பேப்பர் மூலம் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து நீர் பயன்பாட்டைச் சிக்கனமாக்கி நிறைவான மகசூல் பெறுகின்றனர். 

தர்பூசணி பயிரிடுவதால் ஏக்கர் ஒன்றுக்கு 30 டன் வரை மகசூல் கிடைக்கும். சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. 60 நாள்களில் அறுவடையாகும் புதிய ரக தர்பூசணிக்கு உரம், மருந்துகள் சொட்டுநீர் மூலம் பாய்ச்சுவதால் உரம் வீணாவதில்லை. மேலும் தற்போது உடலுக்கு தீங்கு விளைவிக்காத பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத பயோ உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்வதால் நுகர்வோர் தர்பூசணியை விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். 

அதிக நீர்ச்சத்துள்ள தர்ப்பூசணியை அனைத்து பருவங்களிலும் மக்கள் பயன்படுத்துவதால் இதன் தேவை அதிகமாகி வருகிறது. வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து உடனடியாக பணம் பட்டுவாடா செய்வதால் விவசாயிகள் தர்பூசணியை ஆர்வத்துடன் சாகுபடி செய்துவருகின்றனர். 

இதுகுறித்து திருமூர்த்தி என்ற விவசாயி கூறுகையில், கிலோ ரூ.5 க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், லாபம் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு ரூ.9 முதல் ரூ.11 வரை விற்பனையானதால் ஓரளவு நல்ல இலாபம் கிடைத்தது. சத்தி சுற்றுவட்டார பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக விலை குறைவாக விற்பனையாகிறது. அறுவடை செய்யப்படும் தர்பூசணியை வாங்கும் வியாபாரிகள் அவற்றை கேரளா, கர்நாடக மற்றும் மாலத்தீவு போன்ற இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்." என்றார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...