கவனச்சிதறல் இல்லாமல் படித்தாலே போட்டி தேர்வில் வெற்றி பெறலாம் - கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை: கவனச்சிதறல் இல்லாமல் படித்தாலே போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்று கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை: கவனச்சிதறல் இல்லாமல் படித்தாலே போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்று கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற கேள்விகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் விதமாக தினமலர் நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சி கொடியாசிய வளாகத்தில் நடைபெற்று வருகிறது.



இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன் சிவில் சர்விஸ் என்கிற போட்டி தேர்வு குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "சிவில் சர்விஸில் (போட்டி தேர்வு) மொத்தம் 23 வகைகள் உள்ளன. போட்டி தேர்வில் வெற்றி பெறும்போது குறைந்த வயதில் தலைமை பொறுப்பு கிடைக்கும். மேலும், பணியில் மனதிருப்தி கிடைக்கும்.



மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் கூட பதவிகள் கிடைக்கும். 

நான் மருத்துவம் பயின்றேன் அதன் பின் போட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்று தற்போது கோவை மாநகராட்சி ஆணையராக பணிபுரிகிறேன். ஒரு மருத்துவராக மனநிறைவு அடைந்ததை விட இதில் மனநிறைவு அதிகம் பெற்றேன். 

பதவிக்கு வந்தபிறகு நிறைய சிக்கல்கள் இருக்கும். ஆனாலும், மக்களுக்கு சேவையாற்றுவதால் மனநிறைவு கிடைக்கிறது.



கவனச்சிதறல் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் படித்தாலே போதும். இணையதளத்தைப் பயன்படுத்தி படிக்கலாம். 21 வயது என்பது தேர்வு எழுதுவதற்கான தகுதி. ஆனால், அதற்கான திட்டமிடுதல் தற்போதே அவசியம். சமூகத்தை நோக்கிய சிந்தனைகள் வரவேண்டும் அதற்கு செய்தித்தாள்கள் படிக்க வேண்டும்." என்றார்.

மூன்று நாட்கள் நடக்கும் இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்றுள்ளன. ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சி குறித்து மாணவர் எல்.லோகேஷ் கூறுகையில், "பிளஸ் 2 முடித்துவிட்டு என்ன படிக்கலாம்? என முடிவு செய்துவிட்டேன். ஆனால், எங்கு படிக்கலாம்? என்பதை அறியவே இங்கு வந்தேன். இங்கு வந்தது எனக்கு பயனுள்ளதாக உள்ளது." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...