காமன்வெல்த்தில் தங்கம் வென்றார் தமிழக வீரர் சதீஷ் குமார்

காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளு தூக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சதீஷ்குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், பளு தூக்குதலில் இந்தியாவிற்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது

காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளு தூக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சதீஷ்குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், பளு தூக்குதலில் இந்தியாவிற்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில், ஆடவர் பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் தமிழக வீரர் சதீஷ் குமார் கலந்து கொண்டார்.  மொத்தம் 317 கிலோ எடையை தூக்கி இந்தப் போட்டியில் தங்கத்திற்கான மகுடத்தை சூடினார்.

முன்னதாக, மகளிருக்கான பளுதூக்குதலில் 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சிகோம் மிராபாய் சானு, 53 கிலோ எடை பிரிவில் சஞ்சிதா சானு தங்கம் வென்றனர். சதீஷ் குமார் தங்கம் வென்றதன் மூலம் இந்தியா, பளுதூக்குதல் போட்டியில்  3-வது தங்கம் வென்றது. இதனையடுத்து, பதக்கப்பட்டியில் 3 தங்கம் ஒரு வெள்ளி ,ஒரு வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

பதக்கம் வென்ற சதீஷ்குமார் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவராவார். பதக்கம் வென்றது குறித்து அவரது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர் கடந்த 2014 ம்ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...