ஈரோடு : அனுமதியின்றி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு செல்பவர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈரோடு : அனுமதியின்றி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு செல்பவர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை, தமிழகத்திலேயே மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாகும். இந்த அணை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அணையின் மேற்பகுதி செல்ல யாருக்கும் அனுமதியில்லை. மேலும், பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அணையின் மேற்பகுதியை வருடத்தில் ஒருநாளான ஆடிமாதம் பதினெட்டாம் தேதிக்கு மட்டுமே பொதுமக்களுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால், கடந்த சில நாட்களாக அணையின் மேற்பகுதிக்கு செல்லும் பழத்தோட்டம் நுழைவாயில் வழியாக பொதுப்பணித்துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள் மற்றும் உழியர்கள் விடுமுறை நாட்களில் வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வருபவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், பழத்தோட்டம் நுழைவு வாயிலில் உள்ள ஊழியர்கள் அணையின் மேற்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள மரங்களில் இருந்து காய்ந்து விழும் விறகுகளை உணவகங்களுக்கு விற்பனை செய்வதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
"பொதுப்பணித்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள் தங்களது உறவினர்களை மட்டுமே அணையில் மேற்பகுதிக்கு செல்ல அனுமதிக்கின்றனர். அவர்கள் இரவு நேரம் வரை அணையின் மேற்பகுதியில் அமர்ந்து கொண்டு மது அருந்துவதும், சில தீய செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி விட்டது. இதைப்பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்வதில்லை", என சமூக ஆர்வலர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
ஆசியாவிலேயே பெரிய மண் அணை என்ற பெருமையைக் கொண்ட பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை, தமிழகத்திலேயே மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாகும். இந்த அணை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அணையின் மேற்பகுதி செல்ல யாருக்கும் அனுமதியில்லை. மேலும், பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அணையின் மேற்பகுதியை வருடத்தில் ஒருநாளான ஆடிமாதம் பதினெட்டாம் தேதிக்கு மட்டுமே பொதுமக்களுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால், கடந்த சில நாட்களாக அணையின் மேற்பகுதிக்கு செல்லும் பழத்தோட்டம் நுழைவாயில் வழியாக பொதுப்பணித்துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள் மற்றும் உழியர்கள் விடுமுறை நாட்களில் வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வருபவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், பழத்தோட்டம் நுழைவு வாயிலில் உள்ள ஊழியர்கள் அணையின் மேற்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள மரங்களில் இருந்து காய்ந்து விழும் விறகுகளை உணவகங்களுக்கு விற்பனை செய்வதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
"பொதுப்பணித்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள் தங்களது உறவினர்களை மட்டுமே அணையில் மேற்பகுதிக்கு செல்ல அனுமதிக்கின்றனர். அவர்கள் இரவு நேரம் வரை அணையின் மேற்பகுதியில் அமர்ந்து கொண்டு மது அருந்துவதும், சில தீய செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி விட்டது. இதைப்பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்வதில்லை", என சமூக ஆர்வலர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
ஆசியாவிலேயே பெரிய மண் அணை என்ற பெருமையைக் கொண்ட பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.