தடையை மீறி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு செல்லும் மக்கள் : கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை

ஈரோடு : அனுமதியின்றி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு செல்பவர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு : அனுமதியின்றி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு செல்பவர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை, தமிழகத்திலேயே மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாகும். இந்த அணை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அணையின் மேற்பகுதி செல்ல யாருக்கும் அனுமதியில்லை. மேலும், பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அணையின் மேற்பகுதியை வருடத்தில் ஒருநாளான ஆடிமாதம் பதினெட்டாம் தேதிக்கு மட்டுமே பொதுமக்களுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது. 

ஆனால், கடந்த சில நாட்களாக அணையின் மேற்பகுதிக்கு செல்லும் பழத்தோட்டம் நுழைவாயில் வழியாக பொதுப்பணித்துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள் மற்றும் உழியர்கள் விடுமுறை நாட்களில் வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வருபவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், பழத்தோட்டம் நுழைவு வாயிலில் உள்ள ஊழியர்கள் அணையின் மேற்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள மரங்களில் இருந்து காய்ந்து விழும் விறகுகளை உணவகங்களுக்கு விற்பனை செய்வதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

"பொதுப்பணித்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள் தங்களது உறவினர்களை மட்டுமே அணையில் மேற்பகுதிக்கு செல்ல அனுமதிக்கின்றனர். அவர்கள் இரவு நேரம் வரை அணையின் மேற்பகுதியில் அமர்ந்து கொண்டு மது அருந்துவதும், சில தீய செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி விட்டது. இதைப்பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்வதில்லை",  என சமூக ஆர்வலர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

ஆசியாவிலேயே பெரிய மண் அணை என்ற பெருமையைக் கொண்ட பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...