நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை முறையாக நடத்தாத தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை முறையாக நடத்தாத தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உதகையில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கூட்டுறவு சங்கத் தேர்தல் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பணியாற்றிய ஊழியர்களை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் பணியை செய்ய விடாமலும், மிரட்டியும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
இதனையடுத்து, தேர்தலின் போது சில இடங்களில் ஊழியர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. எனவே, இதுபோன்ற அரசு பொதுவேலைகளில் பணியாற்றும் போது தங்களுக்கான பாதுகாப்பை அரசு ஏற்படுத்த வேண்டும், தேர்தல் நடக்கும் போது முறையான வகையில், பாதுகாப்பாக தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
உதகையில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கூட்டுறவு சங்கத் தேர்தல் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பணியாற்றிய ஊழியர்களை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் பணியை செய்ய விடாமலும், மிரட்டியும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
இதனையடுத்து, தேர்தலின் போது சில இடங்களில் ஊழியர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. எனவே, இதுபோன்ற அரசு பொதுவேலைகளில் பணியாற்றும் போது தங்களுக்கான பாதுகாப்பை அரசு ஏற்படுத்த வேண்டும், தேர்தல் நடக்கும் போது முறையான வகையில், பாதுகாப்பாக தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.