பள்ளியில் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைப்பதைக் கண்டித்து பெற்றோர்கள் தர்ணா

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் துவக்கப்பள்ளியின் வளாகத்தில் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைப்பதைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் துவக்கப்பள்ளியின் வளாகத்தில் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைப்பதைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட இடுவம்பாளையம் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி வளாக மைதானத்தில் மேல்நிலை குடிநீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணிக்காக குழிகள் தோண்டப்பட்டன. இதில், பள்ளியின் கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில், மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், இன்று மேலும் ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க அளவிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அளவிடும் பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு அதிகாரிகள் திரும்பி சென்றதையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...