திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் துவக்கப்பள்ளியின் வளாகத்தில் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைப்பதைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் துவக்கப்பள்ளியின் வளாகத்தில் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைப்பதைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட இடுவம்பாளையம் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி வளாக மைதானத்தில் மேல்நிலை குடிநீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணிக்காக குழிகள் தோண்டப்பட்டன. இதில், பள்ளியின் கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில், மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று மேலும் ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க அளவிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அளவிடும் பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு அதிகாரிகள் திரும்பி சென்றதையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட இடுவம்பாளையம் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி வளாக மைதானத்தில் மேல்நிலை குடிநீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணிக்காக குழிகள் தோண்டப்பட்டன. இதில், பள்ளியின் கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில், மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று மேலும் ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க அளவிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அளவிடும் பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு அதிகாரிகள் திரும்பி சென்றதையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.