கோவை: கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் அறிவித்துள்ளது.
கோவை : கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், " கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சனிக்கிழமை மதியத்திற்கு மேல் அல்லது ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையைப் பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்காதவாறு அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
காலை நேரம் வெப்பநிலையைப் பொறுத்தவரையில் 34.5 டிகிரி செல்சியஸ் முதல் 36 வரை அதிகபட்சம் பதிவாகக்கூடும். இரவு நேரத்தில் 24.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதே சமயம், காற்றின் வேகம் 8 கி.மீ. முதல் 10 கீ.மீ. வரை வீசக்கூடும்," என்றார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், " கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சனிக்கிழமை மதியத்திற்கு மேல் அல்லது ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையைப் பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்காதவாறு அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
காலை நேரம் வெப்பநிலையைப் பொறுத்தவரையில் 34.5 டிகிரி செல்சியஸ் முதல் 36 வரை அதிகபட்சம் பதிவாகக்கூடும். இரவு நேரத்தில் 24.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதே சமயம், காற்றின் வேகம் 8 கி.மீ. முதல் 10 கீ.மீ. வரை வீசக்கூடும்," என்றார்.