10 நாட்கள் மட்டுமே நடக்கும் உதகை குதிரைப் பந்தயம் : குதிரைப் பந்தய பிரியர்கள் ஏமாற்றம்

நீலகிரி: உதகையில் வரும் மே 12-ம் தேதி தொடங்கவிருக்கும் குதிரைப்பந்தயம் வெறும் 10 நாட்களே நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், குதிரைப் பந்தய பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நீலகிரி: உதகையில் வரும் மே 12-ம் தேதி தொடங்கவிருக்கும் குதிரைப்பந்தயம் வெறும் 10 நாட்களே நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், குதிரைப் பந்தய பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.



உதகையில் பிரசித்தி பெற்ற குதிரை பந்தயமானது ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இதனைக் காண அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவர். எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா இந்தக் குதிரை பந்தய மைதானத்தில் நடந்ததால், இங்கு குதிரைகள் ஓடுதளம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓடுதளத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, இந்த ஆண்டுக்கான குதிரை பந்தயம், தாமதமாக மே 12-ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் 28 நாட்கள் நடைபெறும் குதிரை பந்தயம், இந்த ஆண்டு மே 12-ம் தேதி முதல் ஜுன் 14-ம் தேதி வரை உள்ள சனி மற்றும் ஞாயிறு தினங்கள் என மொத்தம் வெறும் 10 நாட்கள் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பந்தயத்தில் பங்கேற்க உள்ள குதிரைகள் மற்றும் ஜாக்கிகள் ஏப்ரல் 15-ம் தேதி உதகைக்கு வருகை தர உள்ளனர். தேர்வுகள் முடியும் தருவாயில் தொடங்கும் இந்தக் குதிரை பந்தயம் கோடை சீசனின் துவக்க நிகழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், குதிரை பந்தயம் இந்த ஆண்ட காலதாமதமாக துவங்குகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குதிரை பந்தய பிரியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...