உதகை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து உதகையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உதகை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து உதகையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சியினர் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று உதகை ஏ.டி.சி., சுதந்திர திடல் முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சியினர் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று உதகை ஏ.டி.சி., சுதந்திர திடல் முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.