வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த வழக்கு : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 10-ம் தேதி போராட்டம்

கோவை: வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேம்படுத்தும் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கோவை: வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேம்படுத்தும் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கோவையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேம்படுத்துவதற்கான கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஆதி தமிழர் கட்சி தலைவர் வெண்மணி பேசுகையில், "சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோயல் மற்றும் லலித் தலைமையிலான அமர்வு வழங்கி உள்ள தீர்ப்பு சாதிய வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. 

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முறையாக வழக்குகள் பதியப்படுவது இல்லை. அவ்வாறு பதிவு செய்யப்பட்டாலும் விரைவில் நீதி கிடைப்பதில்லை. இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கி உள்ள தீர்ப்பால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தைப் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், பா.ஜ.க., இந்துத்துவ கொள்கை கொண்ட இந்த நீதிபதிகள் வேண்டும் என்றே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக இவ்வாறு தீர்ப்பு கொண்டு வந்து இருக்காலாம். இந்தத் தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமையாவிட்டால் ஏப்.,10-ல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்," எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...