கோவை: கோவை வனச்சரகத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அகழிகள் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவை: கோவை வனச்சரகத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அகழிகள் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பாலமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. அவ்வப்போது, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் ஊடுருவாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட விவசாய நிலங்களைச் சுற்றி அகழிகள் அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1,000 குடும்பங்கள் பயன்பெற இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
"இந்தத் திட்டத்தின் கீழ் வனச்சரகத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை சுற்றியும் அகழி அமைக்கப்படுகின்றன. இதுவரை 8 கி.மீ. தொலைவிற்கு அகழி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது," என வனத்துறை அதிகாரி சி. பழனிராஜா கூறினார்.
பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பாலமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. அவ்வப்போது, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் ஊடுருவாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட விவசாய நிலங்களைச் சுற்றி அகழிகள் அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1,000 குடும்பங்கள் பயன்பெற இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
"இந்தத் திட்டத்தின் கீழ் வனச்சரகத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை சுற்றியும் அகழி அமைக்கப்படுகின்றன. இதுவரை 8 கி.மீ. தொலைவிற்கு அகழி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது," என வனத்துறை அதிகாரி சி. பழனிராஜா கூறினார்.