உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையோர இரும்பு தடுப்புகள் திருட்டு : மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி

கோவை: கோவை வாளாங்குளக் கரையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பை சேதப்படுத்தி, 200 அடி நீளமுள்ள இரும்பு தடுப்புகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மாநகராட்சி அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை: கோவை வாளாங்குளக் கரையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பை சேதப்படுத்தி, 200 அடி நீளமுள்ள இரும்பு தடுப்புகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மாநகராட்சி அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 



கோவையில் அமைந்துள்ள எட்டு குளங்களில் ஒன்றான வாளாங்குளத்தை ஒட்டி சுங்கம் - உக்கடம் பைபாஸ் சாலை உள்ளது. உக்கடம் பகுதியிலிருந்து சுங்கம் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்கள் சாலையை ஒட்டியுள்ள வாளாங்குளத்தில் விழுந்து விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், குளக்கரையில் குப்பைகளையும், கட்டிடக் கழிவுகளையும் கொட்டுவதை தடுப்பதற்காகவும் பல லட்சம் ரூபாய் செலவில் சாலையின் ஓரத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.



சுமார் 3 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளின் சில பகுதிகள் தற்போது சேதமடைந்துள்ளன. குறிப்பாக, இந்திரா நகர் எதிரே அமைக்கப்பட்டிருந்த 200 அடி நீளமுள்ள இரும்பு தடுப்புகள் சமூக விரோதிகளால் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது, அங்கு வெறும் இரும்பு கம்பிகள் மட்டுமே உள்ளன. அப்பகுதியில் வசிப்போர், இவற்றில் கால்நடைகளை கட்டி வைத்துள்ளனர். 



"உக்கடத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் ஏராளமானோர் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். விபத்துகளை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகள் சேதமடைந்துள்ளதால், அவையே தற்போது ஆபத்தாக மாறியுள்ளன. சாலையோரங்களில் நிற்கும் சிறிய இரும்பு கம்பிகள் இரவு நேரங்களில் பயணிப்பவர்களுக்கு பெரும் விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது' என்கிறார் இப்பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ரவி.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "சமூக விரோதிகள் சிலர் சாலையோர இரும்பு தடுப்புகளின் சில பாகத்தை திருடியுள்ளனர். இதுபற்றி போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். இதுபோன்ற செயல்கள் அரங்கேறிய நிலையில், தடுப்பு அமைத்ததோடு தங்களின் பணி முடிந்துவிட்டது என்று எண்ணாமல், மக்களின் வரிப்பணத்தில் உருவான அவற்றைப் பாதுகாப்பதும் தங்களின் கடமை என்று மாநகராட்சி நிர்வாகம் உணர்வது எப்போது...?

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...