கோவை: காவிரி விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து கோவை அரசு கலை கல்லூரி முன்பாக மாணவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: காவிரி விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து கோவை அரசு கலை கல்லூரி முன்பாக மாணவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக கோவையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து போராட்டங்கள், சாலை மறியல்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். உச்சகட்டமாக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், கோவை அரசு கலை கல்லூரியின் முன்பு காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.