கோவை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழக முதலமைச்சரிடமிருந்து 7வது முறையாக பதக்கங்கள் வாங்கிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களுக்கு கோவை மக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழக முதலமைச்சரிடமிருந்து 7வது முறையாக பதக்கங்கள் வாங்கிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களுக்கு கோவை மக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கடந்த நான்காம் தேதி சென்னையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர், மத்திய உள் துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கினார். இதில் தமிழக முதல்வர்களிடமிருந்தும் மத்திய அரசுகளிடமிருந்தும் பெரியய்யா அவர்கள் சிறப்பாக பணியாற்றியதற்காக இதுவரை ஆறு பதக்கங்களை பெற்றுள்ளார். தற்போது மீண்டும் தமிழக முதல்வரிடமிருந்து திறம்பட செயல்பட்டதற்காக 7வது முறையாக பதக்கங்களை பெற்றுள்ளார். ஏற்கனவே கோவையில் மேட்டுப்பாளையம் சாலை செல்வதற்காக புரூக்பீல்ட்ஸ் சாலை ஒரு வழி பாதையானதின் சிரமத்தை ஏற்று பொதுமக்களின் குறையை தீர்த்து இரு வழி பாதையாக்கி கோவை மக்களிடம் பாராட்டுகளை பெற்றார்.

இந்த நிலையில் அவருக்கு தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட இந்த பதக்கத்திற்கு கோவை மக்களும் காவல்துறையினரும் பாராட்டுக்கள் தெரிவித்தவன்னம் உள்ளனர்.