வால்பாறையில் ஆட்டைக் கொன்ற சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் பீதி

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் குட்டியிட்டு 3 தினங்களே ஆன ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதியில் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் குட்டியிட்டு 3 தினங்களே ஆன ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதியில் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைப் புலியின் அட்டகாசம் அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடுமலை எஸ்டேட்டில் சைதுல் என்ற 4 வயது சிறுவனை சிறுத்தைப்புலி தாக்கிக் கொன்றது. இந்த பீதியிலிருந்து மக்கள் மீண்டு வருவற்குள் சிறுத்தைப்புலி மீண்டும் வால்பாறை பகுதியில் அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் குடியிருந்து வரும் தேவசி என்பவரது வீட்டின் மாடியில் நுழைந்த சிறுத்தைப்புலி அவர் வளர்த்து வந்த நாயை பிடித்துச் சென்றது.

அதேபோல, இன்று அதிகாலை வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டோபி காலனிக்குள் நுழைந்த சிறுத்தைப்புலி, வெள்ளிங்கிரி என்பவர் வளர்த்து வந்த ஆட்டின் கழுத்தில் கடித்துக் கொன்றது. இந்த ஆடு குட்டியிட்டு 3 தினங்களே ஆகிறது. அந்தக் குட்டியும் காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளது.



மேலும், வால்பாறை கலைஞர் நகர் பகுதியில் நேற்று இரவு சிறுத்தைப்புலியின் நடமாட்டம் அங்கு வைக்கப்பட்டிருக்கும் சி.சி.டி.வி.இ கேமராவில் பதிவாகியுள்ளது. இவ்வாறு வால்பாறை நகருக்குள் தொடர்ந்து சிறுத்தைப்புலியின் நடமாட்டம் காணப்படுவதால் வனத்துறையினர் உடனடியாக கூண்டு அதனைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...