திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரிமேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூரில் குமரன் சிலை முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என கோரி கோக்ஷங்களை எழுப்பினர்.
மேலும், இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் திருப்பூர் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் விஜயன், திருப்பூர் பத்திரிக்கையாளர் நலச்சங்க தலைவர் சுப்பிரமணி மற்றும் ராஜ் செய்தியாளர் முரளி, மூத்த பத்திரிக்கையாளர் ஜஹாங்கீர் உள்ளிட்ட ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட மற்றும் தாலுக்கா அணைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரிமேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூரில் குமரன் சிலை முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என கோரி கோக்ஷங்களை எழுப்பினர்.
மேலும், இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் திருப்பூர் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் விஜயன், திருப்பூர் பத்திரிக்கையாளர் நலச்சங்க தலைவர் சுப்பிரமணி மற்றும் ராஜ் செய்தியாளர் முரளி, மூத்த பத்திரிக்கையாளர் ஜஹாங்கீர் உள்ளிட்ட ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட மற்றும் தாலுக்கா அணைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.