வெளி உணவுகளுக்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் தடை விதிக்கக் கூடாது

மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை திரையரங்குக்குள் கொண்டு செல்லக் கூடாது என்ற தடையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தத் தடை, மருத்துவ காரணங்களால் வெளியில் விற்கப்படும் உணவை சாப்பிட முடியாத மூத்த குடிமக்களை வெகுவாக பாதிப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. 

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உணவுப் பண்டங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை அதிக விலைக்கு விற்கக் கூடாது. அவை சாதாரண கட்டணங்களில் மட்டுமே விற்கப்பட வேண்டும். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது, என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இருதரப்பு வாதங்களைக் கேட்டு பரிசீலனை செய்து, 6 வாரங்களுக்குள் இதற்கான கொள்கை வரையறுக்கப்பட்டும் என அரசு தரபிபில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜுன் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...