4 நாட்கள் நடக்கும் மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறை இன்று தொடக்கம்

கோவை : கோவை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரியில், மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது.

கோவை : கோவை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரியில், மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது. 



சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரியும், தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையும் இணைந்து ஜவுளி தொழில்நுட்பத் துறைக்கும், ஜவுளி தொழில் முனைவோர்க்கும் உதவ பல்வேறு தொழில்நுட்ப உட்பிரிவுகளில் ஜவுளி பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்கவிழா கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தொழில்நுட்ப ஜவுளித்துறையின் ஒரு உட்பிரிவான மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது. 8-ம் தேதி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 80 பேர் பங்கேற்றனர். 



பட்டறையின் முதல் நாள் துறைசார் வல்லுநர்களின் விரிவுரைக்காக ஒதுக்கப்பட்டது. மேலும், மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறையில் தயாரிப்பு முறை, தொழில்நுட்பம், இயந்திரங்கள், தரநிலைகள், சந்தைத் தேவைகள், சந்தைப்படுத்துதல் முதலிய தலைப்புகளில் பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.  மேலும், புதிய பொருட்கள் உற்பத்தி, SWOT ஆராய்ச்சி புதிய வியாபாரத்தில் நுழைவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...